கூடங்குளத்தில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் மேலும் இரண்டு அணு உலைகள் நிறுவப்படுவதற்கான ஒப்பந்தம் இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்தானது. ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர், ரஷ்ய அதிபர் புதினுடன் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலை நிறுவுவதற்காக தேவைப்படும் ரூ. 50 ஆயிரம் கோடியில் பாதித் தொகையை ரஷ்யா கடனாக வழங்கும் எனவும் இந்திய அணுசக்தி கழகம் மீதித்தொகையை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகள் மூலம் 6000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements