யாழன் ஆதி

இயக்குநர்கள் அமீர் மற்றும் பா. ரஞ்சித்தின் உரையாடல் மிக முக்கியமான ஒன்றாகப் பொதுவெளியில் மாறியிருக்க வேண்டிய ஒன்று.
ஆனால் இடையில் புகுந்து நாம் தமிழர் சீமான் தேவையற்ற கருத்துகளைக் கூறி அதன் சேர்மையைக் குலைத்துவிட்டார் என்றே கூறாலாம்.
தம்பி சீமான் ( என்னை விட வயது குறைவாகத்தான் இருப்பார். அவர் ரஞ்சித்தை அவன் இவன் என்று பேசுவதற்கு இது பரவாயில்லை தானே) அவர்கள் பேசிய இரண்டு கானொலிகளைக் கண்ட பிறகே இதை நான் எழுதுகிறேன். நாமெல்லாம் எழுதி ரஞ்சித்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்னும் நிலை எல்லாம் கிடையாது. ரஞ்சித் சுய சிந்தனையாளர். தன் வாழ்விலிருந்து கலைகளையும் கருத்துகளையும் மொழிபவர்.
சரி தம்பி சீமான், அமையவிருக்கும் தமிழ்த் தேசியத்தில் ஜாதி இருக்குமா இருக்காதா?
ஜாதி ஒழிக்க என்ன வழி என்று உங்கள் செயல் திட்டத்தைச் சொல்வீர்களா?
மொழியால் ஜாதியை ஒழிக்க முடியுமா? அப்படியானால் உலகின் பெரும் இனவாதமான கறுப்பர் வெள்ளையர் வேறுபாடு ஆங்கிலத்தால் அழிந்ததா?
சமூக நலக் கோட்பாட்டால் அழிந்ததா?
மொழிவழி அமைந்த எந்த தேசியத்திலாவது வேறுபாடுகள் களையப்பட்டிருக்கிறதா?
மொழி ஒரு பயன்பாட்டுக்கருவி என்பதைத் தாண்டி அதற்கு வேறு என்ன பயன் இருக்கிறது?
தமிழால் தேசியம் கட்டமைக்கப்படும் என்றால் ஈழத்தில் நடந்த போரால் அங்கிருக்கும் ஜாதி அழிந்துவிட்டதா?
இந்தியாவில் இருக்கும் பல்வேறு தேசிய இனங்கள் ஒரே மொழிப்பேசக்கூடியவையாக இருகின்றனவே. அம்மொழிகள் அம்மக்களை ஒன்றாக்கி இருக்கிறதா?
சரி உங்கள் செயல் திட்டம் தான் என்ன தம்பி
ஊரையும் சேரியையும் குடிமாற்றம் செய்வீர்களா?
ஜாதியின் தோற்றுவாயாக இருக்கும் இந்து மதத்திலிருந்து வெளியேறச் சொல்வீர்களா
சேரியிலிருக்கும் நாம் தமிழர்களையாவது ரட்சிப்பீர்களா?
நீங்கள் தமிழ்த்தேசிய ஆட்சியாளராய் ஆனால் ஒரே ஆணையால் ஜாதி ஒழிந்தது என்று முதல் கையெழுத்து இடுவீர்களா..
யாழன் ஆதி, எழுத்தாளர். சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.
All the answers are in NTK manifest. Please go and check at http://www.makkalarasu.com/
LikeLike